உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

சிதம்பரம் தியாகவல்லியில் காதலனை கைபிடிக்க தர்ணா செய்யும் பெண்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/0f5b73c9-7748-4759-9faa-e56294e843ba_S_secvpf.gif
சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் மோகன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் தமிழரசி (வயது 19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவருக்கும் திருச்சோபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (25) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

               தமிழரசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்துருவிடம் கேட்ட போது அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.   இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி நேற்று காலை திருச்சோபுரத்தில் உள்ள சந்துரு வீட்டு முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனை கண்ட பொது மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று தமிழரசியிடம் விசாரணை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior