உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 18, 2011

நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் எம்.பி..எஸ்.சிவசுப்ரமணியன் சட்டமன்றத்தில் பேசினார்

           நெய்வேலி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன் பேச்சால் பேரவையில் புதன்கிழமை சிரிப்பலை எழுந்தது.

பேரவையில் புதன்கிழமை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியநெய்வேலி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணியன்

             நெய்வேலி அரசுப் போக்குவரத்து பணிமனையை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எடுத்துச் சென்றுவிட்டார். அதை மீண்டும் அங்கு கொண்டுவர வேண்டும் என்றார். 

அப்போது, குறுக்கிட்ட பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார், 

             ""பணிமனையை முன்னாள் அமைச்சர் எடுத்துச் சென்றாரா? வேறு இடத்துக்கு மாற்றி விட்டாரா?'' எனக் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, பேரவையில் சிரிப்பலை எழுந்தது. 

உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜி, 

               ""நெய்வேலியில் போக்குவரத்து பணிமனையை வேறு இடத்துக்கு மாற்றியுள்ளதாக உறுப்பினர் தெரிவித்தார். அதை மீண்டும் பழைய இடத்துக்கேக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior