உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகத்திற்குமுன்னாள் மாணவர்கள் வழங்கிய ரூ.2 லட்சம் புத்தகம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் துறை நூலகத்திற்கு 1956-60-ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கினர்.

             இதற்கான நிகழ்ச்சி பொறியியல் புல வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்தார். பதிவாளர் எம்.ரத்தினசபாபதி புத்தகங்களின் பங்கையும், அவை மாணவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது குறித்தும் பேசினார். பொறியியல் புல முதல்வர் பி.பழனியப்பன் வாழ்த்தினார். முன்னாள் மாணவர் டி.ஆர்.ஜெகதீசன் வரவேற்றார். பி.என்.உமயரூபகன் நன்றி கூறினார்.  டி.ஆனந்தராஜன், டி.ராஜாராமன், சி.ராமலிங்கம், ஜே.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைப் பேராசிரியர் ஆர்.பாஸ்கர், நூலகர் ஏ.மணிமேகலை ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior