உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

விருத்தாசலம்:

          விருத்தாசலம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு அரசின் நிவாரண நிதி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

             விருத்தாசலம் அடுத்த கு.நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன் மகன் உத்திரபாலன் (23). இவர் கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அரசக்குழியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்திவிட்டார். இதில் மின்சாரம் தாக்கி உத்திரபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தமிழக அரசின் இயற்கை மற்றும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வட்டாட்சியர் பிரபாகரன் மாணவரின் குடும்பத்துக்கு வழங்கினார். துணை வட்டாட்சியர் அரங்கநாதன், மண்டல துணை வட்டாட்சியர் மெகருனிசா, வருவாய் ஆய்வாளர் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior