உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 03, 2011

இந்திரா காந்தி நினைவு நாள்: கடலூரில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம்

கடலூர்:

              முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூரில் மாணவ, மாணவியர் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. 

               மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை ஆட்சியர் வே.அமுதவல்லி தொடங்கி வைத்தார்.  மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் திருமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. 

ரத்ததான முகாம்:

              இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் செம்மண்டலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், ஆசிரியர்கள் சார்பில் ரத்ததான முகாம், கடலூர் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டது.  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஹார்லிக் செல்லதுரை தலைமை வகித்தார். 200 பேர் ரத்த தானம் செய்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் டி.மகேந்திரவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ்: 

                  காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கள்கிழமை இந்திரா காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப் பட்டது. மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இந்திரா காந்தி படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.  மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.  பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலை விஜயகுமார்,  அருள் பிரகாசம், சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் சட்டப் பேரவை தொகுதி தலைவர் ராமராஜ் உள்ளிட்ட பலர் இந்திரா காந்தி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior