உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 11, 2011

பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில் திருத்தேர் வெள்ளோட்டம்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

பரங்கிப்பேட்டை: 

            பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி  கோவிலில் வரும் 13ம் தேதி திருத்தேர் வெள்ளோட்டத்தில் மூன்று அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பழமை வாய்ந்த முத்துக்குமரசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசம், கந்தசஷ்டி திருவிழா மற்றும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் சத்ரு சம்ஹரா திருசதி வழிப்பாடு நடந்து வருகிறது. வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமரசாமிக்கு சத்ருசம்ஹரா த்ரிசதி வழிப்பாட்டு குழு சார்பில் சுமார் 20 லட்சம் மதிப்பில் நூதன திருத்தேர் செய்யப்பட்டது. 

        திருத்தேர் வெள்ளோட்டம் வரும் 13ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் சத்துணவுத்துறை அமைச்சர் சம்பத், சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி பங்கேற்று திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை சத்ருசம்ஹரா த்ரிசதி வழிப்பாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.













0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior