
கடலூர்:
கடலூரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்தது. இதனால் கடலூர் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற முடியாமல் உள்ளது. இந்நிலையில் கடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரசபை தலைவர் சி.கே. சுப்பிரமணியன், கமிஷனர் டாக்டர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செல்வராஜ், கண்காணிப்பு பொறியாளர் அபிஷேக் ராஜன் ஆகியோர் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு முதல் முதுநகர் வரை நடைபெற்று வரும் தற்காலிக சாலை சீரமைப்பு பணியை நேரில் வந்து ஆய்வு செய்து பார்வையிட்டனர். அப்போது நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன், கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் கோட்ட உதவி பொறியாளர் சிவசக்திவேல், கவுன்சிலர் ரமேஷ், அன்பு, சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் செல்வராஜ், கண்காணிப்பு பொறியாளர் அபிஷேக் ராஜன் ஆகியோர் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு முதல் முதுநகர் வரை நடைபெற்று வரும் தற்காலிக சாலை சீரமைப்பு பணியை நேரில் வந்து ஆய்வு செய்து பார்வையிட்டனர். அப்போது நகரமன்ற தலைவர் சி.கே. சுப்பிரமணியன், கோட்ட பொறியாளர் ராஜேந்திரன் கோட்ட உதவி பொறியாளர் சிவசக்திவேல், கவுன்சிலர் ரமேஷ், அன்பு, சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக