உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

6 மாத​மாக ஊதி​யம் இல்லை: பள்ளி துப்​பு​ரவு ஊழி​யர்​க​ள் வருத்தம்

கட​லூர்,​ நவ.27:​

கட​லூர் மாவட்​டத்​தில் அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு ​​ கடந்த 6 மாத​மாக ஊதி​யம் கிடைக்​க​வில்லை. ​ த​மி​ழ​கம் முழு​வ​தும் அரசு மற்​றும் அரசு உதவி பெறும் உ.யர்​நிலை,​ மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பகு​தி​நே​ரம் மற்​றும் முழு​நே​ரப் பணி​யில் நிய​மிக்​கப்​பட்டு பணி​பு​ரி​கி​றார்​கள். நி​ரந்த ஊழி​யர்​க​ளுக்கு தடை​யின்றி ஊதி​யம் வழங்​கப்​பட்டு விடு​கி​றது. ஆனால் தாற்​கா​லிக ஊழி​யர்​க​ளா​கப் பணி​யில் இருப்​ப​வர்​க​ளுக்கு மாத ஊதி​யம் ரூ. 450தான். இநத ஊதி​ய​மும் இவர்​க​ளுக்கு உரிய நேரத்​தில் கிடைப்​பது இல்லை என்று புகார் தெரி​விக்​கி​றார்​கள். ​ க​ட​லூர் மாவட்​டத்​தில் 500-க்கும் மேற்​பட்ட துப்​பு​ரவு ஊழி​யர்​கள் பள்​ளி​க​ளில் பணி​பு​ரி​கி​றார்​கள். இவர்​க​ளுக்கு கடந்த 6 மாத​மாக ஊதி​யம் வழங்​கப்​பட வில்லை. ​ இது குறித்து கட​லூர் மாவட்​டக் கல்​வித் துறை​யில் விசா​ரித்​த​போது கிடைத்த தக​வல்:​ ​ தாற் ​கா​லிக துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு சில்​ல​றைச் செல​வி​னங்​கள் என்ற தலைப்​பில் நிதி ஒதுக்​கப்​ப​டு​கி​றது. மாநில வரவு செல​வுத் திட்​டத்​தில் இதற்​கான நிதி ஒதுக்​கப்​ப​டு​கி​றது. அந்த நிதி மாவட்​டங்​க​ளுக்கு இன்​ன​மும் வந்து சேர​வில்லை. நிதி வந்​த​தும் மொத்​த​மாக ஊதி​யம் வழங்​கப்​ப​டும். ​ ​ தாற்​கா​லி​க​மா​கப் பணி​பு​ரி​யும் துப்​பு​ரவு ஊழி​யர்​க​ளுக்கு அரசு வழங்​கும் மாத ஊதி​யம் ரூ. 450 கட்​டு​ப​டி​யா​காது. இந்த ஊதி​யத்​துக்கு யாரும் வேலைக்கு வர​மாட்​டார்​கள். எ​னி​னும் பல பள்​ளி​க​ளில் பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்க நிதி​யில் இருந்து கூடு​த​லாக ஒரு தொகையை மாதா​மா​தம் வழங்கி வரு​கி​றார்​கள். அரசு நிதி ஒதுக்​கீடு வரும்​போது அரசு சம்​ப​ளம் வழங்​கப்​பட்டு விடும். பெற்​றோர் ஆசி​ரி​யர் சங்​கத்​தில் நிதி இல்​லா​விட்​டால் ஊதி​யம் வழங்​கு​வது சிர​மம். ஆனால் ஆண்​டு​தோ​றும் இதே நிலை​தான் இருந்து வரு​கி​றது என்​றும் தெரி​வித்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior