உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

லாரி மோதி மாண​வன் சாவு

சிதம் ​ப​ரம்,​ நவ.27:​

சிதம்​ப​ரம் அருகே லாரி மோதிய விபத்​தில் பள்ளி மாண​வர் இறந்​தார். படு​கா​ய​ம​டைந்த மற்​றொரு மாண​வர் மருத்​து​வ​ம​னை​யில் சிகிச்சை பெற்று வரு​கி​றார். சி​தம்​ப​ரத்தை அடுத்த புவ​ன​கிரி அருகே உள்ள கீழ​ம​ணக்​குடி கிரா​மத்​தைச் சேர்ந்த சின்​ன​சா​மி​யின் மகன் சிவ​பா​லன் ​(16), இவ​ரும் புவ​ன​கி​ரி​யைச் சேர்ந்த சந்​தி​ர​நாத் ​(16) ஆகிய இரு​வ​ரும் அரசு ஆண்​கள் மேல்​நி​லைப் பள்​ளி​யில் படித்து வரு​கின்​ற​னர். வி​யா​ழக்​கி​ழமை மதி​யம் பெரு​மாத்​தூ​ரில் உள்ள ஹோட்​டல் ஒன்​றில் சாப்​பி​டு​வ​தற்​காக சைக்​கி​ளில் சென்​றுக் கொண்​டி​ருந்​த​னர்,​ அப்​போது சிதம்​ப​ரம் நோக்கி வந்த லாரி ஒன்று அவர்​க​ளது சைக்​கிள் மீது மோதி​யது.÷இவ் விபத்​தில் படு​கா​ய​ம​டைந்த மாண​வர் சிவ​பா​லன் மருத்​து​வ​ம​னைக்கு செல்​லும் வழி​யி​லேயே இறந்​தார். சந்​தி​ர​நாத் சிதம்​ப​ரம் அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்க்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரு​கி​றார். இது குறித்து புவ​ன​கிரி போலீ​ஸôர் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ள​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior