உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

நட​ரா​ஜர் கோயில் வழக்கு விசாரணை 6 வாரத்​துக்கு ஒத்திவைப்பு

சிதம்​ப​ரம்,​ நவ.27:​

சிதம்​ப​ரம் நட​ரா​ஜர் கோயிலை அரசு கையக்​கப்​ப​டுத்​தி​யது தொடர்​பாக புது​தில்லி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் மேல்​மு​றை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அம் மனு மீதான விசா​ரணை உச்ச நீதி​மன்​றத்​தில் அல்​டா​மஸ்​க​பீர்,​ சிரி​யாஸ்​ஜோ​சப் ஆகிய நீதி​ப​தி​கள் கொண்ட பெஞ்சு முன்​னி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை விசா​ர​ணைக்கு வந்​தது.÷த​மி​ழக அரசு அற​நி​லை​யத்​துறை சார்​பில் சிறப்பு வழக்​க​றி​ஞர் அசோக்​தே​சாய்,​ மூத்த வழக்​க​றி​ஞர் மரி​ய​சுந்​த​ரம்,​ அரசு வழக்​க​றி​ஞர் நெடு​மா​றன் ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர். அரசு தரப்​பில் இந்து அற​நி​லை​யத்​துறை ஆணை​யர் சம்​பத்,​ செய​லர் முத்​து​சாமி ஆகி​யோர் ஆஜ​ரா​யி​னர்.÷பொது தீட்​சி​தர்​கள் சார்​பில் வழக்​க​றி​ஞர் கே.கே.வேணு​கோ​பால்,​ சி.எஸ்.வைத்​தி​ய​நா​த​ஐ​யர்,​ குரு​கி​ருஷ்​ண​கு​மார்,​ சுப்​பி​ர​ம​ணி​ய​சாமி ஆகி​யோர் ஆஜ​ரா​னார்​கள். சி​வ​ன​டி​யார் உ.ஆறு​மு​க​சாமி,​ ஆலய மீட்​புக் குழு வி.எம்.எஸ்.சந்​தி​ர​பாண்​டி​யன் ஆகி​யோர் சார்​பில் வழக்​க​றி​ஞர்​கள் காலின்​கன்​சால்வ்ஸ்,​ பி.ஆர்.கோவி​லன்​பூங்​குன்​றம்,​ சி.ராஜூ ஆகி​யோர் ஆஜ​ரா​னார்​கள். மே​லும் இவ் வழக்​கில் ஆலய பாது​காப்பு குழு​வைச் சேர்ந்த டி.சிவ​ரா​மன்,​ குஞ்​சி​த​பா​தம்,​ கீதா உள்​ளிட்ட 5 பேர் தங்​க​ளை​யும் விசா​ரிக்க வேண்​டும் என மனு தாக்​கல் செய்​த​னர். வ​ழக்கை விசா​ரித்த நீதி​ப​தி​கள் அரசு தரப்​பு,​ சிவ​ன​டி​யார் ஆறு​மு​க​சாமி தரப்​பு மனுவை பொது​தீட்​சி​தர்​கள்,​ சுப்​பி​ர​ம​ணி​ய​சா​மி ஆகியோர் அடுத்த 2 வாரத்​துக்​குள் நீதி​மன்​றத்​தில் அளிக்க வேண்​டும்.÷அது வரை எந்த உத்​தி​ர​வின்றி இவ்​வ​ழக்கு விசா​ரணை 6 வாரத்​திற்கு ஒத்தி வைப்​ப​தாக நீதி​ப​தி​கள் உத்​த​ரவு பிறப்​பித்​த​னர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior