உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, நவம்பர் 28, 2009

கட​லூர் மாவட்ட விவ​சா​யி​கள் கவ​னத்​திற்கு

நெய்வேலி,​ நவ. 27: ​

விருத்​தா​ச​லம் வட்​டா​ரத்​தில் தற்​போது வட​கி​ழக்​குப் பரு​வ​மழை கார​ண​மாக கனத்த மழை பெய்​துள்​ளது.


இந்த கன​ம​ழை​யால் சம்பா நெற்​ப​யிர்​கள் வெவ்​வேறு நிலை​யில் பாதிக்​கப்​பட வாய்ப்​புள்​ளது. ம ​ழை​நீர் வடிந்த பின் பயிர்​கள் பாதிக்​கப்​ப​டும் நிலை​யில் கீழ்​கண்ட பரிந்​து​ரை​களை கடை​பி​டிக்​க​வேண்​டு​மென விருத்​தா​ச​லம் வேளாண் உதவ இயக்​கு​நர் இ.அன்​ப​ழ​கன் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.÷அ​தன்​படி சில பகு​தி​க​ளில் மழை​யால் சம்பா இள​ந​டவு பாதிக்​கப்​பட்டு பயிர்​கள் கரைந்து ஆங்​காங்கே திட்​டுத் திட்​டா​கக் காலி​யாக காணப்​ப​டும். நாற்​று​கள் கைவ​சம் இருப்​பின் அதே ரகத்​தைக் கொண்டு,​ பயி​ரைக் கலைத்து நடவு செய்து பயிர் எண்​ணிக்​கை​யைப் பரா​ம​ரிக்க வேண்​டும். நீர் தேங்​கி​யுள்ள வயல்​க​ளில் உட​ன​டி​யாக நீரை வடிக்க வாய்ப்​பில்​லா​மல் பயிர் பாதி​ய​ளவு நீரில் மூழ்​கி​யி​ருக்​கும் நிலை​யில் துத்​த​நா​கம்,​ தழைச்​சத்து இல்​லா​மல் பயிர் மஞ்​சள் மற்​றும் பழுப்பு நிற​மாக வாய்ப்​புள்​ளது. ஏக்​க​ருக்கு 2 கிலோ யூரியா,​ 1 கி.சிங்க்​சல்​பேட்,​ 200 லிட்​டர் நீரில் கலந்து கைத் தெளிப்​பான் உத​வி​யு​டன் பயிர்​க​ளின் இலை​யின் மீது உட​ன​டி​யாக தெளிக்​க​வேண்​டும் என்​பன உள்​ளிட்ட பல்​வேறு ஆலோ​ச​னை​களை அன்​ப​ழன் தெரி​வித்​துள்​ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior