உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 17, 2009

பண்​ருட்டி: குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது வெள்ளம்

பண்ருட்டி,​​ டிச.​ 16: ​ 

                தொடர் மழை​யின் கார​ண​மாக அண்ணா கிரா​மம் ஒன்​றிய கிரா​மங்​க​ளைச் சேர்ந்த சுமார் 5 ஆயி​ரம் ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த நெற்​ப​யிர்​கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்​துள்​ளன.​

                          பண்​ருட்டி வட்​டம் அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யத்தை சேர்ந்த பைத்​தாம்​பாடி,​​ காவ​னூர்,​​ சத்​தி​ரம்,​​ உளுத்​தாம்​பட்டு,​​ என​தி​ரி​மங்​க​லம்,​​ ஏ.பி.குப்​பம்,​​ அவி​ய​னூர்,​​ ரெட்​டிக்​குப்​பம்,​​ கரும்​பூர் உள்​ளிட்ட பல கிரா​மங்​கள் உள்​ளன.​ 

                           இக் ​கி​ரா​மத்​தில் உள்ள ஆயி​ரக்​க​ணக்​கான ஏக்​கர் பரப்​ப​ளவு உள்ள விவ​சாய நிலங்​கள்,​​ விழுப்​பு​ரம் மாவட்​டம் திருக்​கோ​வி​லூர் தென்​பெண்ணை ஆற்​றில் உள்ள ஏர​ளூர் எல்​லீர் சத்​தி​ரம் அணைக்​கட்​டில் இருந்து வரும் பைத்​தாம்​பாடி கால்​வாய் மூலம் பாசன வசதி பெறு​கின்​றன.​ க​டந்த 3 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் சென்னை-​திருச்சி தேசிய நெடுஞ்​சாலை விரி​வாக்​கத்​தின் போது ​ விழுப்​பு​ரம் மாவட்​டம் பேரங்​கி​யூர் அருகே இருந்த ​ கலங்கு மற்​றும் உபரி நீர் ஆற்​றுக்​குச் செல்​லும் வழியை அடைத்து சாலை அமைத்து விட்​ட​தால் மழைக்​கா​லத்​தில் ஏற்​ப​டும் வெள்ள நீரால் மேற்​கண்ட கிரா​மத்​தில் உள்ள விவ​சாய நிலங்​கள் மூழ்கி பாதிப்​ப​டைந்து வரு​கின்​றன.​ க​டந்த 5 நாள்​க​ளாக பெய்து வரும் தொடர் மழை​யின் கார​ண​மாக மேற்​கண்ட கிரா​மத்தை சேர்ந்த சுமார் 5 ஆயி​ரம் ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த சம்பா நெற்​ப​யிர்​கள் பாதிப்​ப​டைந்​துள்​ளன.​

                  இ​து​கு​றித்து தமிழ்​நாடு விவ​சா​யி​கள் சங்க மாவட்​டத் தலை​வர் நாரா​ய​ணன் கூறி​யது:​ 

                        பண் ​ருட்டி வட்​டம்,​​ அண்​ணா​கி​ரா​மம் ஒன்​றி​யத்தை சேர்ந்​தச் பைத்​தாம்​பாடி,​​ காவ​னூர்,​​ சத்​தி​ரம்,​​ என​தி​ரி​மங்​க​லம்,​​ சத்​தி​ரம்,​​ உள்​ளிட்ட 10-ம் மேற்​பட்ட கிரா​மங்​க​ளில் உள்ள விளை நிலங்​கள் ஒவ்​வொரு ஆண்​டும் ஏற்​ப​டும் மழை வெள்​ளத்​தால் பாதிக்​கப்​ப​டு​கி​றது.​ தற்​போது பெய்து வரும் மழை​யின் கார​ண​மாக 10,​ 15 நாள்​க​ளில் அறு​வடை செய்ய வேண்​டிய சுமார் 5 ஆயி​ரத்​துக்​கும் மேற்​பட்ட ஏக்​கர் நிலப்​ப​ரப்​பில் பயி​ரி​டப்​பட்​டி​ருந்த சம்பா நெல் பயிர்​கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்​துள்​ளன.​ ​ இத​னால் விவ​சா​யி​கள் பெருத்த நட்​டம் அடைந்​துள்​ள​த​னர்.​ எ​னவே,​​ பாதிக்​கப்​பட்ட விவ​சாய நிலங்​களை தமி​ழக அரசு பார்​வை​யிட்டு,​​ ஏக்​கர் ஒன்​றுக்கு தலா ரூ.10 ஆயி​ரம் நட்ட ஈடு வழங்க ​ உரிய நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும் என்​றார்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior