உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

கம்ப்யூட்டர் பயிற்சி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்


சிதம்பரம்:

                              சிதம்பரத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் மற் றும் வேலைவாய்ப்பு கல்வி படித்து வரும் சிதம் பரம் நகராட்சி பகுதியை சேர்ந்த வறுமை கோட் டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா எல்.சி.சி., நிறுவன வளாகத்தில் சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட் டது. கமிஷனர் ஜான்சன் தலைமை தாங்கினார். ஏ.சி.டி., நிறுவன நிர்வாக இயக்குநர் தண்டபாணி முன்னிலை வகித்தார். அரிமா  முருகப்பன் வாழ்த்துரை வழங்கினார்.  நகராட்சி நிர்வாக செங்கல்பட்டு மண்டல சமுதாய அதிகாரி  சண்முகபிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   முகாமில், இலவச கல்வி பெறும் மாணவர்கள், பன்னாட்டு நிறுவன  வேலை வாய்ப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி கையேடு வழங்கப்  பட்டது.  சிதம்பரம் நகராட்சி சார்பில் கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம் நேரிடையாக  நடத் தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு மையத்தை சிதம்பரம் ஏ.சி.டி., நிறுவன வளாகத்தில் தமிழக ஒருங் கிணைப்பாளர் சுதாகர் துவக்கி வைத்தார்.   இந்த மையத்தின் ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இலவச கல்வி பெறும் 598 மாணவர்களும் சென்னை மற் றும் பெரிய நகரில் உள்ள நிறுவனங்களில் சிதம்பரத்தில் இருந்தே வேலைக் கான நுழைவு தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்றனர். மணிகண்டன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior