உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு மனு

கடலூர்: 

                முன்னாள் கிராம நிர் வாக அலுவலர்கள் குறைந் தபட்ச ஓய்வூதியமாக ரூ.3500  வழங்க வேண்டும் என குறைகேட்பு கூட்டத் தல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கடலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் துணை இயக்குனர் கண்ணப்பன், டி.ஆர். ஓ., அலுவலர் நடராஜன், கலெக்டரின் உதவியாளர் (கணக்கு) செல்வராஜ்  பங்கேற்றனர். 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:  

                             ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு பங் கேற்கும் அதிகாரிகள் தேவையான பதில்களை கொண்டு வர வேண்டும். அதே போன்று ஓய்வூதியர்கள் மேல் நடவடிக்கை மற்றும் பரிந்துரை செய்வதற்கான ஆதாரங்களையும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது கிராம நிர்வாக அலுவலர் கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 

               தற்போது 1216 அளவிற்கே ஓய்வூதியம் பெற்று வருகிறோம். எங்களுடன் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 3500 பெற்று வருகின்றனர். எனவே அரசின் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 3500 வழங்க வேண்டும்   என குறிப்பிட்டிருந்தனர். கலெக்டர், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior