உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

செங்கல்பட்டு கூர் நோக்கு இல்லத்தில் தப்பிய இருவர் கடலூரில் சிக்கினர்


கடலூர்: 

                        செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய இரண்டு பேர் கடலூரில் பிடிபட்டனர். கடலூர் திருப்பாதிரிபுலியூர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தபாபு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள் ளிரவு ஒரு மணி அளவில் சிதம்பரம் சாலையில் நின்றிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர்.
 
                                 அவர்கள் கடலூர் முதுநகர் சுனாமி நகரைச் சேர்ந்த பாரதி மகன் விக்னேஷ் (17), விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் ஏழுமலை மகன் ராஜா(18) என தெரியவந்தது. இருவரும் திருட்டு வழக்கில் கைதாகி கடலூர் புதுப்பாளையம் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப் பட்டனர். அங்கிருந்து தப்பி கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடிய வழக்கில் கைதாகி செங்கல்பட்டு கூர்நோக்கு இல் லத்தில் அடைக்கப்பட்டதும், அங்கிருந்து மூன்று நாட்களுக்கு முன் தப்பி வந்ததும் தெரிய வந்தது.  இருவரையும் கைது செய்து,  செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior