உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

கடலூரில் பிராணிகள் வதை தடுப்பு சங்கம் துவக்க விழா

கடலூர்:

                          மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் துவக்க விழா கடலூரில் நடந்தது. மாவட்ட பிராணி வதை தடுப்பு சங்க தலைவரான கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கி பேசினார். சங்க உறுப்பினர்களை துளசிதாஸ் அறிமுகப்படுத்தினார். பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் பங்குகள் அதன் தேவைகள் குறித்து மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் நடேசன் பேசினார். 
 
                            வக்கீல் அருணாசலம் சங்கத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் பதிவு சான்றிதழ்கள் கலெக்டரிடம் வழங்கினார். பிராணிகள் வதைக்கப்படுவதை தடுக்கும் முறை மற்றும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து டாக்டர் ராமமூத்தி விளக்கினார். சங்க இயக்குனர்கள் ராசன், பாலசுப்ரமணியன், ஜனார்த்தனன், ரவி, மகாவீர்மல் மேத்தா உட்படலர் பேசினர். பிரையோன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior