உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி முடிந்தது


சேத்தியாத்தோப்பு: 

                           சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு கரும்பு அரவை பணி முடிந்தது. சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 687 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. ஆலையின் இந்த ஆண்டிற்கான அரவைப் பணி நவம்பர் மாதம் துவங்கியது. அப்போது கரும்பு விவகார எல்லைப் பிரச்னைகள் காரணமாக கரும்பு விவகார எல்லையில் குறைந்த அளவே கரும்பு பயிரிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஒன்னரை லட்சம் டன் கரும்பு அரவை நடந்தாலே ஆச்சரியம் என்று கரும்பு உதவியாளர்கள் தெரிவித்தனர். தமிழக அரசால் அதிரடியாக புதிய ஆட்சியர் மரியம் ஆசியா நியமிக்கப்பட்டார். அவரது துரித செயல்பாட்டால் 2 லட்சத்து 687 டன்கள் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது விவசாயிகள்,  தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior