உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

கடலூரில் அமைச்சர் உத்தரவிட்டும் அகற்றப்படாத பேனர்கள்

கடலூர்:

            மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டும் கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை.

              தலைவர்கள் பிறந்த நாள், நன்றி அறிவிப்பு, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கடலூரில் இப்போது புதிய கலாசாரமாகிவிட்டது. நிகழ்ச்சிக்குப் பல நாள்களுக்கு முன்னரே பேனர்கள் வைப்பதும், நிகழ்ச்சி முடிந்து பல நாள்கள் ஆனாலும் அவற்றை அகற்றாததும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.

              இந்த பேனர்கள் சாலைகளில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி, விபத்துகளுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகின்றன. மேலும் வர்த்தக நிறுவனங்கள் முன்னால் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளை மறைத்தும், அவர்களது நிறுவனத்தின் முகப்பே மறைந்து போகும் அளவுக்கும், பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளதாக போலீசார்  தெரிவிக்கிறார்கள். பொதுமக்கள் பலரும் இந்த பேனர்களால் முகம் சுழித்துக் கொண்டு இருந்த நிலையில், அண்மையில் கடலூரில் நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இந்த டிஜிட்டல் பேனர்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார்.

                    டிஜிட்டல் போனர்களை போலீஸôர் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்பு பேனர்களை வைக்கவும் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் அகற்றிவிடவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சரே உத்தரவிட்டதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அமைச்சரின் உத்தரவு வியாழக்கிழமை மாலை வரை கடைபிடிக்கப்படாதது, கடலூர் மக்களை பெரிதும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த மாவட்ட அமைச்சரின் உத்தரவுக்கு இவ்வளவுதான் மரியாதையா என்றும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். பல தலைவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் முடிவடைந்து பல நாள்கள் ஆகியும், இந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior