உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

சிதம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்:

             சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. 

                நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் பி.என்.ஷாஜகான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரியாஸ் அகமது, அமைப்பாளர் என்.மன்சூர்கான், ஒருங்கிணைப்பாளர் இர்பான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.ஜாகீர்உசேன் வரவேற்றார். காஜா மொய்னுதீன் தலைமையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும், தொழுகையும் நடைபெற்றது. சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ஏ.காதர், துணைத் தலைவர் ஏ.எஸ்.ஷாகுல்வஹமீது, அமைப்பாளர் ஏ.எம்.ஆரிஃபுல்லா, ஒருங்கிணைப்பாளர் ரோஸ்மேரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

                    இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.எஸ்.வேல்முருகன், மாநில சேவாதள கூடுதல் அமைப்பாளர் எஸ்.சரவணக்குமார், நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.கே.சித்தார்த்தன், சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யு.அஷ்ரப்புல்லா நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior