உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 28, 2010

ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:

            தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் பணியிடை நீக்கத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
              
       நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.செந்தில் தலைமை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ சிறப்புரையாற்றினார். 

மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜூ பேசியது:

                   தமிழக அரசு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்க விதிமுறைகள், குற்றவியல் நடைமுறைகள் சட்டத்துக்கும், ஊழல் தடுப்பு சட்டத்துக்கும் விரோதமாக திட்டமிட்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிமுறைகள் ஊழல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கவசமாக பயன்படுவதுடன், விசாரணைக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் முதல்வர் உள்ளிட்ட 3 பேர் குழுவிடம் இருப்பதால் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கும், ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது என உயர் நீதிமன்றத்தில் உமாசங்கர் ஐஏஎஸ் ஆதாரங்களுடன் தாக்கல் செய்துள்ளார்.

                மேலும் பல்வேறு ஊழல்களை கண்டுபிடித்துள்ளார். இதனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த நேர்மையான அதிகாரி உமாசங்கர் 20 ஆண்டுகள் கழித்து பொய் சான்றிதழ் கொடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. எனவே பணி இடைநீக்கத்தை தமிழக அரசு நீக்க வேண்டும். உமாசங்கர் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சி.ராஜூ தெரிவித்தார். மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், புஷ்பதேவன், புரட்சிகர மாணவர் முன்னணி பாலு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior