உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

விருத்தாசலம் பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் விளைச்சல் பாதிப்பு

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் மேட்டுக் காலனி பகுதியில் விளை நிலங்களில் கழிவுநீர் பாய்ந்து வருவதால் நிலத் தின் தன்மை மாறுபடுவதோடு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. விருத்தாசலம் ஆலிச்சிக்குடி ரோடு மேட்டுக் காலனி பகுதியில் புறவழிச்சாலை அருகில் விளை நிலங்கள் உள்ளது. 

                  இங்கு 20 ஏக்கர் அளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. நகரத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து கடைவீதி வழியாக வரும் கழிவு நீர் விளை நிலங்களில் பாய்கிறது. தொடர்ந்து சில ஆண்டுகளாக கழிவுநீர் பாய்வதால் நிலத்தின் தன்மை மாறி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் கழிவுநீரில் பன்றி, மாடு உள்ளிட்டவைகள் மேய்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி விளை நிலங்களில் கழிவுநீர் பாய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior