உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 28, 2010

கடலூர் சில்வர் பீச்சில் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் துப்புரவு பணி

கடலூர் : 

                கடலூர் சில்வர் பீச் சில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் துப்புரவு பணி மேற்கொண்டனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட் டம் சார்பில் கடலோர சுற் றுப்புறச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று துவங்கியது.  துணைவேந்தர் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பதிவாளர் ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். 

                   நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை கடற்கரைகளை தூய்மைபடுத்தி நேற்று கடலூர் வந்தனர். தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் செயின்ட் ஜோசப் கல்லூரி பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கடலோர பகுதியில் விழிப்புணர்வு பலகையை நட்டு துப்புரவு பணி மேற்கொண்டனர்.  ஊர்வலத்தில் புல முதல்வர்கள் துறைத் தலைவர்கள் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் பல் கலைக்கழக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior