உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

கடலூரில் மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில்10 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:

             கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், |10.25 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.

               மக்கள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 380 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 11 பேருக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் 15 பேருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத் திறனாளிகள் 17 பேருக்கு தலா |3ஆயிரம் வீதம், தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன், ஒருவருக்கு 3 சக்கர வண்டி, எய்ட்ஸ் பாதித்த 58 குழந்தைகளுக்கு 1.21 லட்சம் கல்வி உதவித் தொகை, மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior