உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

கறவை மாடுகளுக்கு சத்தான புல் வளர்ப்பது எப்படி?​​ வேளாண் மாணவர்கள் விளக்கம்

கடலூர்:

                ​ ​ கடலூர் அருகே மணக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு இருக்கும் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள்,​​ விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளுக்கு சத்தான புல் வளர்க்கும் முறைகளை விளக்கிக் கூறினர்.​ ​மணக்குப்பம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில்,​​ செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.​ ​​

                  இதில் பங்கேற்ற வேளாண் கல்லூரி மாணவர்கள்,​​ மாட்டுத் தீவனம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தினர்.​ ​கோ 3 ரகம் புல் கறவை மாடுகளுக்கு ஏற்றது.​ இதைத் தீவனமாக உட்கொள்ளும் கறவை மாடுகள் கூடுதலாக பால் கறக்கும்,​​ மாடுகள் விரும்பிச் சாப்பிடும்.​ சினை பிடிக்காத மாடுகளுக்கு சினை பிடிக்கவும் ஏதுவாக இருக்கும்.​ 10 சென்ட் நிலத்தில் பயிரிடப்படும் ​ இந்த ரக புல்லைக் கொண்டு,​​ ஆண்டு முழுவதும் ஒரு பசுவைப் பராமரிக்க முடியும்.​ ​இதனால் மாட்டுத் தீவனச் செலவும் குறையும் என்றும் எடுத்துரைத்தனர்.​ மாடுகளுக்கு காப்பீடு செய்வதின் அவசியம் பற்றியும் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior