உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

பொது மக்களை அச்சுறுத்தும் ​ சிதிலமடைந்த கடலூர் சில்வர் பீச் பொதுக்கழிப்பறைகள்

கடலூர்:

                  ​ கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகள் சீர்குலைந்து,​​ கடற்கரைக்கு வருவோரை அறுவெறுப்புக்கும்,​​ பாதுகாப்பற்ற நிலைக்கும் உள்ளாக்கி வருகின்றன.​ ​2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நகராட்சி பொது நிதியில் இருந்து தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட பல இடங்களில் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டன.​ பராமரிப்பு இன்றியும் அவற்றைப் பயன்படுத்துவோரின் அலட்சியம் காரணமாகவும் அவை அனைத்தும் சீர்குலைந்து கிடக்கின்றன.​ ​​ 

                  இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த கழிவறைகள் மாறி வருகின்றன.​ இவை கொள்ளையர்கள் பதுங்கி இருந்து,​​ பீச்சுக்கு வருவோரிடம் வழிப்பறி செய்ய வசதியான இடமாக மாறி வருகின்றன.​ ​​ ​ சிலவர் பீச்சில் மின் விளக்குகள் ஒழுங்காக எரியாத நிலையில்,​​ கடற்கரைக்குக் காற்று வாங்க வருவோரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக உள்ளது.

                        பீச்சுக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு நகராட்சியால் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.​ அதில் ஒரு பகுதியை இந்த பீச்சின் பராமரிப்புக்குச் செலவிட்டால்கூட,​​ மக்களுக்கு ஓரளவேனும் பயனுள்ளதாக அமையும் என்கிறார்கள் கடற்கரைக்கு வருவோர்.​ ​  இந்தப் பொதுக் கழிப்பறைகளை,​​ நகராட்சி பழுதுபார்த்து முறையாகப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது இடித்து தள்ளிவிட வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior