உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

சூறாவளிக் காற்று: கடலூரில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்


புதன்கிழமை இரவு வீசிய சூறாவளிக் காற்றால் வழிசோதனைப்பாளையத்தில் முறிந்து கிடக்கும் வாழை மரங்கள்.
 
கடலூர்:
 
              சூறாவளிக் காற்று காரணமாக கடலூர் பகுதியில் 100 ஏக்கரில் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.  வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இதனால் புதன்கிழமை இரவு 11 மணிக்கு திடீரென புயல் காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை நீடித்தது.  
 
               இதனால் கடலூர் அருகே வழிசோதனைப்பாளையம், ஆண்டியார்தோப்பு, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், சாத்தங்குப்பம், ஒதியடிக்குப்பம், வி.காட்டுப்பாளையம், வெள்ளக்கரை, கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.  இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. இவை பெரும்பாலும் அறுடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.  
 
சேதம் குறித்து விவசாயிகள் கூறுகையில், 
 
                                ""தற்போது மேற்கண்ட கிராமங்களில் முதல்கட்ட அறுவடை முடிந்து, 2-ம் கட்ட அறுவடை நடைபெறத் தயாராக இருந்தது.  சில நாள்களில் வாழைத் தார்களை வெட்டி எடுக்கலாம் என இருந்தோம். ஆனால் சூறாவளிக் காற்றினால் வாழைத் தோட்டங்களில் இருந்த வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளன. இதனால் 100-க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். வாழை மரங்கள் சாய்ந்து விடாமல் இருக்க முட்டுக் கொடுக்கப்பட்டு இருந்தது. எனினும் சூறாவளிக் காற்று பெரும்பாலான வாழை மரங்களைச் சேதப்படுத்தி விட்டது'' என்று தெரிவித்தனர்.   

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior