உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் ரூ 17 லட்சம்

சிதம்பரம்:

                        அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குமராட்சி வட்டார வள மையம் மூலம் 2010-11-ம் கல்வியாண்டுக்கு குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது என வட்டார வள மைய மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

                    86 தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளி மானியம் ரூ 5ஆயிரம் வீதமும், 31 நடுநிலைப்பள்ளிகளுக்குரூ 12ஆயிரம் வீதமும், 19 அரசினர் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ 7 ஆயிரம் வீதமும், ஆக மொத்தம் ரூ 9 லட்சத்து 35 ஆயிரம், பள்ளிகளுக்கு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் 46 தொடக்கப் பள்ளிகளுக்கு பள்ளி பரமாரிப்பு மானியம் ரூ 5ஆயிரம் வீதமும், 55 நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ 10ஆயிரம் வீதமும், ஆக மொத்தம் ரூ 7 லட்சத்து 80 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் சிறப்பு கிராமக் கல்விக் குழு நாள் கொண்டாட 136 பள்ளிகளுக்கு ரூ 300 வீதம், ரூ 40 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது.

                        குமராட்சி ஒன்றியத்தில் மட்டும் பள்ளி மானியம், பள்ளி பராமரிப்பு மானியம் உள்ளிட்டவைக்கு மொத்தமாக ரூ 17 லட்சத்து 55 ஆயிரத்து 800 வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior