உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு குவாரியில் குறைந்த விலையில் மணல்

சிதம்பரம்:
 
                  கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டப் பயனாளிகளுக்கு குறைந்த விலையில் மணல் குவாரி மூலம் மணல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: 

                      கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவுரையின்படி கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்துக்கு காட்டுமன்னார்கோவில், குமராட்சி. கீரப்பாளையம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேவையான மணல் கொள்ளிட வடிநில கோட்டம் நீர் ஆதாரத் துறை சிதம்பரம் எல்லைக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் மணல் குவாரி மூலம் மணல் வழங்கப்படுகிறது.மேற்படி திட்டத்தின் கீழ் தேவைப்படும் பயனாளிகளுக்கு 1 யூனிட் மணல் ரூ 312-க்கு (வரிகள் உள்பட) வழங்கப்படுகிறது

                       .இதற்கான தொகையை செயற்பொறியாளர், பொதுப்பணித் துறை நீர்ஆதாரத்துறை, கொள்ளிடம் வடிநில கோட்டம், சிதம்பரம் என்ற பெயருக்கு வரைவோலையாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பெற்றுக் கொடுக்க வேண்டும் என செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மணல் குவாரி இடங்கள் விவரம்: 

                       குறிஞ்சிப்பாடி ஒன்றியம்- ஆயிப்பேட்டை பரங்கிப்பேட்டை ஒன்றியம் - ஆயிப்பேட்டை குமராட்சி, கீரப்பாளையம், மேல்புவனகிரி ஆகிய ஒன்றியங்கள்- வீரமுடையான்நத்தம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியம்- ஓமாம்புலியூர். 

விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன்: 94434 22419.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior