உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி: தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

கடலூர்:

                மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயிற்சி அளிக்க தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                    மாற்றுத் திறனாளிகளுக்கு தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையம் நடத்துவதற்கு, தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வு செய்யப்படும் தொண்டு நிறுவனங்களின் பயிற்சி மையத்தில் 25 மாற்றுத் திறனாளிகளுக்கு உணவு, உறைவிடம், பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் தொண்டு நிறுவனங்கள், ஊனமுற்றோர் சட்டம் 1995 பிரிவு 52ன் கீழ் புதுப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

                   பயிற்சியில் சேரும் மாற்றுத் திறனாளிகள் 16 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்களாக இருப்பர். தகுதி உள்ள தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior