உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 15, 2010

பண்ருட்டி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பண்ருட்டி:

                பண்ருட்டி பூங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்கள் தயாரித்த அறிவியல் தொடர்பான காட்சிப் பொருள்களை சக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதில் சிறப்பாக காட்சிப்பொருள் அமைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை வ.மல்லிகா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமையாசிரியர் ஏ.முத்துக்குமாரசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior