உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

தமிழகத்தில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரூ. 100 கோடிக்கு மாற்றம்: ரிசர்வ் வங்கி துணைப் பொது மேலாளர்

               தமிழகத்தில் மட்டும் கடந்த ஓராண்டில் பழையதும், கிழிந்ததுமாக இருந்த ரூபாய் நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை ரூ. 100 கோடிக்கு மாற்றிக் கொடுத்துள்ளோம் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையின் துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

                  ராமநாதபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையும், இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் துறையும் இணைந்து ராமநாதபுரத்தில் கிழிந்த நோட்டுகளை மாற்றும் முகாமை நடத்தினர்.  

முகாமில் கள்ள நோட்டுகளை எப்படிக் கண்டறிவது என்பதற்கான கையேட்டை வங்கியின் வாடிக்கையாளரிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு வழங்கல் பிரிவு துணைப் பொது மேலாளர் காயா திரிபாதி வழங்கிப் பேசியது: 

                    கிராமத்தில் வசிக்கும் பாமர மக்களும் பயன்பெறும் வகையிலும் கள்ள நோட்டுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழகம் முழுவதும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து கிழிந்த நோட்டுகளை மாற்றி, புதிய நோட்டுகளை வழங்கும் முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  கடந்த ஓராண்டில் மட்டும் தமிழகத்தில் நடத்திய முகாம்கள் மூலமாக  மொத்தம் ரூ. 100 கோடிக்கு கிழிந்த நோட்டுகளை மக்களிடம் பெற்றுக் கொண்டு புதிய நோட்டுகளை வழங்கியிருக்கிறோம்.  கள்ள நோட்டுகளை அடையாளம் காணுவது எப்படி என்ற கையேடு மற்றும் துண்டுப் பிரசுரங்களையும் முகாம்களின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விளக்கமளிக்கிறோம். 

                      இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.  அண்மையில் புதுச்சேரியில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் இணைந்து நடத்திய முகாமில் மட்டும் ஒரே நாளில் ரூ. 35 லட்சத்துக்கு கிழிந்த நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொண்டனர்.  தமிழகத்தில் எந்த கிராம வங்கிகளும் அழைத்தால்கூட அந்தந்தப் பகுதி மக்களுக்காக நாங்கள் நேரில் வந்து கிழிந்த நோட்டு முகாம்களை நடத்தத் தயாராக இருக்கிறோம்.  அண்மையில் தங்க முலாம் பூசப்பட்ட ரூ. 5 நாணயங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார் காயா திரிபாதி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior