உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

விருத்தாசலம் ஜங்ஷனில் கூட்ஸ் ரயில் தடம் புரண்டது : ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்




விருத்தாசலம் : 

                     விருத்தாசலம் ஜங்ஷனில் நேற்றிரவு கூட்ஸ் ரயில் தடம் புரண்டதால் ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்டது.

                        தூத்துக்குடியில் இருந்து 42 வேகன்களில் யூரியா மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கூட்ஸ் ரயில் நேற்று மதியம் விருத்தாசலம் ஜங்ஷன் வந்தது. அந்த கூட்ஸ் ரயில் 8வது டிராக்கில் நிறுத்தி, 20 வேகன்களில் இருந்த யூரியா மூட்டைகள் இறக்கப்பட்டது. பின் இரவு 8.30 மணிக்கு காட்பாடிக்கு புறப்பட்டது. ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் இன்ஜினில் இருந்து 18 மற்றும் 19வது வேகன்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியபடி 500 மீட்டர் தூரம் வரை சென்றது. 

                       சத்தம் அதிகமாக கேட்டதால் டிரைவர் இன்ஜினை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்தபோது இரண்டு வேகன்கள் தடம் புரண்டிருப்பதை கண்டு, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். கூட்ஸ் ரயில் தடம் புரண்டு நின்ற டிராக்கில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, சிக்னலும் நிறுத்தப்பட்டது. இதனால் சென்னையிலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்து கொண்டிருந்த ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் வயலூர் அருகே நிறுத்தப்பட்டது. அதேபோன்று இரவு 9.15 மணிக்கு வர வேண்டிய கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டது.

                           ரயில்வே அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் கூட்ஸ் ரயில் தடம் புரண்ட 8வது டிராக்கில் மட்டும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, பிற டிராக்குகளில் மின் இணைப்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து வயலூரில் நிறுத்தப்பட்ட சேது எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.05க்கு விருத்தாசலம் ஜங்ஷனை கடந்து சென்றது.அதன் பிறகு கூட்ஸ் ரயில் தடம் புரண்ட ரயில் பாதையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் விருத்தாசலம் ஜங்ஷனில் யூரியா மூட்டைகளை இறக்க நிறுத்திய போது, வேகன்களின் சக்கத்திற்கு இடையே கல் சிக்கிக் கொண்டதும், அதனைக் கவனிக்காமல் ரயில் இயக்கியதால் தடம் புரண்டிருக்கலாம் என தெரிகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior