உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதி நாள் முகாம் ரூ.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

பண்ருடடி: 

                  பண்ருட்டி அடுத்த அவியனூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில்  19 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சீத்தாராமன்  வழங்கினார். பண்ருட்டி அடுத்த அவியனூரில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி தலைமை தாங் கினார். ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூவராகவன் வரவேற்றார். 

                     கலெக்டர் சீத்தாராமன் மனுக்களை பெற்று 19.26 லட்சம் மதிப்பில் 58 நபர்களுக்கு வீட்டுமனைபட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: பசுமை, வளமை, நிறைந்த இப்பகுதி தொடர்ந்து பசுமையாகவும், வளமாகவும் இருக்க வேண்டும். தமிழக அரசு உயிர்காக்கும் காப்பீடு திட் டம், வரும்முன் காப் போம் உள்ளிட்ட பல் வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. மாற்று திறனாளிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வேளாண் களம் மற்றும் சாலை அமைத்து தரப்படும். போக்குவரத்து துறை சார்பில் பண்ருட்டி-அவியனூர்-விழுப்புரம் சாலையில் ஒரு மாதத்தில் கூடுதல் பஸ்வசதி செய்து தரப்படும். அவியனூர்- எனதிரிமங்கலம் சாலைக்கு தனியார் நிலம் தானமாக வழங்கியதால் 55 லட்சத் தில் ஊரக சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்றார்.

                    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன், தாசில்தார் பன்னீர் செல்வம், துயர்துடைப்பு தாசில்தார் மங்கலம்,  தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள் ராமலிங்கம், பிரேமாவதி, மாற்று திறனாளி நல அலுவலர் சீனுவாசன்,போக்குவரத்து துறை பாஸ்கர், பஷீர்அகமது, கைலாசம், முன்னாள் ஒன்றிய தி.மு.க., செயலளர் பலராமன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior