உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிதம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்

சிதம்பரம்:

                   தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நவம்பர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என டிஎஸ்பி ச.சிவனேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து டிஎஸ்பி ச.சிவனேசன் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 

                  சென்னை, பாண்டி, கடலூர், நெய்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம் வரும் பஸ்கள் வடக்கு வீதி, 16 கால் மண்டபத் தெரு, கமலீஸ்வரன் கோயில் தெரு, வேணுகோபால் பிள்ளைத் தெரு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும். சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால் பகுதிகளில் இருந்து சிதம்பரம் வழியாக கடலூர், பாண்டி, சென்னை செல்லும் பஸ்கள் பச்சையப்பன் பள்ளித் தெரு, சபாநாயகர் தெரு, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி வழியாக வெளியே செல்ல வேண்டும்.

                  லாரி மற்றும் கனரக வாகனங்கள் சிதம்பரம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை மேலரத வீதியில் போக்குவரத்துத் தடை செய்யப்படுகிறது.மேற்கண்ட 5 தினங்களும் மேலவீதியில் ஆட்டோக்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலவீதி, தெற்குவீதி, பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டும் போலீசாரால் கண்காணிக்கப்படும்.மேலும் சிதம்பரம் நகரில் எல்லைப் பகுதிகளில் போலீசார்  வாகனத் தணிக்கையில்  ஈடுபடுவர். 

                 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் கடையை திறந்து வைத்து வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ச.சிவநேசன் தெரிவித்தார்.அப்போது இன்ஸ்பெக்டர்கள் எஸ்.கார்த்திகேயன், எம்.கண்ணபிரான் ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior