உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 30, 2010

காட்டுமன்னார்கோவில் கூட்டுறவு வங்கியில் ரூ.11 லட்சம் முறைகேடு

கடலூர் : 

                   கூட்டுறவு வங்கியில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன. 

                      மாவட்ட கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் மிருணாளினி உத்தரவின் பேரில், கூட்டுறவு தணிக்கைத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அதில் 11 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து வங்கிகளின் கணக்குகளை முடக்கம் செய்தனர். பின், முறைகேடு குறித்து வங்கியின் தனி அலுவலர் சுப்ரமணி, செயலர் ரங்கநாதன் மற்றும் அலுவலர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior