உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

கடலூர் அரசு இசை பள்ளியில் 30ம் தேதி மாவட்ட அளவிலான கலை போட்டிகள்

கடலூர் : 

                 மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் வரும் 30ம் தேதி கடலூர் அரசு இசை பள்ளியில் நடக்கிறது. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளியில் 5 முதல் 16 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

                 இந்த ஆண்டு 5 முதல் 8 வயது வரையும், 9 முதல் 12 வயது வரையும், 13 முதல் 16 வரை உள்ளவர்களுக்கான  மாவட்ட அளவில் பாட்டு, நடனம், ஓவியப் போட்டிகள் நடக்கிறது.  இதில் முதலிடம் பெறும் சிறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாநில அளவில் முதல் பரசு 10 ஆயிரம், இரண்டாம் பரிசு 7,500,  மூன்றாம் பரிசு 5,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. 

                      மாவட்ட அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்கும் சிறுவர்கள் போட்டிக்குத் தேவையான வரைதாள், சுதிப் பெட்டி மற்றும் டேப்ரிக்கார்டர் முதலிய உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். மேலும் நடனம் மற்றும் குரலிசைப் போட்டிகளில் தமிழிசைப் பாடல்களை மட்டுமே பாட வேண்டும். போட்டியில் பங்கேற்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது வயது சான்றிதழுடன் கடலூர் புதுப்பாளையம் அரசு இசை பள்ளிக்கு வரும் 30ம் தேதி காலை 9 மணிக்கு வர வேண்டும். இத்தகவலை தஞ்சாவூர் கலை பண்பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior