உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 28, 2010

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பட்டாசு கடை நடத்தினால் நடவடிக்கை! : தீயணைப்பு துறை அதிகாரி எச்சரிக்கை

கடலூர் :  

                பட்டாசு விற்பனை கடைகளில் பாதுகாப்பு கருதி  25 கிலோவிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி எச்சரித்துள்ளார். 
இதுகுறித்து கடலூர் கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறியது: 

                     கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 45 இடங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் சாலையோரங்களில் பட்டாசுகளை விற் பனை செய்யக் கூடாது.பட்டாசு கடைகளில் கண்டிப்பாக 25 கிலோவிற்கு மேல் வெடி பொருள்களை வைத்திருக் கூடாது. 180 டெசிபல்ஸ் மேல் உள்ள பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.கடைகளில் மணல், தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கடைகளில் மின் பல்புகளுக்கு சுவிட்சை  வெளியில் வைத்திருக்க வேண் டும். அதிக வெப்பத்தை வெளியிடும் பல்புகளை பயன்படுத்தக் கூடாது. தற்காலிக கூரை தேவையற்றது.

                          பட்டாசு பெட்டிகள் மற்றும் "கிப்ட் பாக்ஸ்'களை  பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். இவற்றை திருமண மண்டபம், வணிக வளாகம்  போன்றவற்றில் வைத்திருக்கக் கூடாது. தரைத் தளத்திற்கு கீழே நிலவறைகள் மற்றும் கட்டடத்தின் மேலும் வைத்திருக்கூடாது. ஜவுளிக்கடைகளில் தீபாவளி நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே பொதுமக்கள் சென்று வர விசாலமான வழிகளை ஏற்படுத்த வேண்டும். 

                    கடையை பூட்டும் போது மின் இணைப் புகளை முழுவதுமாக துண்டிக்க வேண்டும். தீபாவளியையொட்டி மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கடலூரில் தீயணைப்பு நிலையம், திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, ஆல் பேட்டை பகுதியில் தலா ஒரு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

                    மேலும் ஒவ் வொரு நகராட்சி பகுதிகளிலும் தீயணைப்பு வண்டிகள் உடன் நகராட்சி தண்ணீர் வண்டியும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் போது கைத்தறி துணி அணிந்திருக்க வேண்டும். சிறுவர்களை தனியாக பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. குடிசை பகுதிகளில் வாண வெடிகளை பயன்படுத்தக் கூடாது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக் கூடாது.  பட்டாசு வெடிக் கும் போது காயம் ஏற்பட்டால் உடன் குளிர்ந்த நீரை ஊற்றி உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

                     விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடுவது மற்றும் தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப் புதுறை சார்பில் பள்ளி, கல்லூரி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு செயல் விளக்கம்  அளிக் கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து பகுதியில் பள்ளி மாணவர்களைக் கொண்டு ஊர்வலம் நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  கோட்ட தீயணைப்பு துறை அதிகாரி குமாரசாமி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior