உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு


கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு செல்லும் நீர்.
 
சிதம்பரம்:

                கல்லணையிலிருந்து கீழணைக்கு அதிகநீர் வருவதால் கீழணையிலிருந்து வியாழக்கிழமை 24 ஆயிரம் கனஅடி நீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது.

              இதனால் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருகரையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மேலும் கல்லணையிலிருந்து வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 34 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நீர் வெள்ளிக்கிழமை கீழணையை வந்து சேரும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

              கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 45.5 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டு கூடுதலாக வரும் நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக விவசாயிகளுக்கு பாதிப்பின்றி சிறிது சிறிதாக திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னைக்கு விநாடிக்கு 76 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது.சிதம்பரம் பகுதியில் பலத்த மழைசிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை முதல் கருத்த மேகமூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்தது. 

             இதனால் குண்டும், குழியுமாக உள்ள சிதம்பரம் நகர சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. சிதம்பரத்தை சுற்றியுள்ள பல்வேறு நகர்களில் நீர் வடிய வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.

மழையளவு விவரம்: 

 சிதம்பரம்-10 மி.மீ, 
புவனகிரி-15 மி.மீ, 
சேத்தியாத்தோப்பு- 11.5 மி.மீ, 
பரங்கிப்பேட்டை- 16 மி.மீ, 
அண்ணாமலைநகர்- 3.6 மி.மீ. 

சிதம்பரம் நகரில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ததால் பெரும்பாலான பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை விடப்பப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior