உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

சிதம்பரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
சிதம்பரம்:

              சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் பிச்சாவரம் வனப்பகுதிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் அதிகரித்துள்ளது.

                கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகளும், ஆயிரக்கணக்கான உள்நாட்டுப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதிக்கு சென்று, அங்கு படகு சவாரி மூலம் மாங்குரோவ் காடுகளை கண்டு ரசிக்கின்றனர். 

               ""கடந்த ஆண்டில் மட்டும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நடராஜர் கோயிலை பார்வையிட்டுச் சென்றுள்ளனர். நிகழாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி ஜி.ராமமூர்த்தி தெரிவித்தார்.

            மேலும் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பஸ்களில் செல்ல விரும்புவோரும், ஊட்டி, கொடைக்கானல், முதுமலை, ஏற்காடு, மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல்களில் தங்கம் விரும்புவோரும் சிதம்பரத்தில் உள்ள சுற்றுலாத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

இதுகுறித்து மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 

       04144 238739

செல்போன்: 

          96594 96446.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior