உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, நவம்பர் 26, 2010

கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பஸ்கள்


கடலூர் பஸ் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் ஓரமாக உள்ள சேவைச் சாலை ஒருவழிப் பாதையில், விதிகளுக்கு மாறாக இரு பஸ்கள் எதிரும் புதிருமாக வந்ததால், மோதி கொள்ளும் நிலை
 
கடலூர்:

             கடலூரில் போக்குவரத்து விதிகளை தனியார் பஸ்கள் தொடர்ந்து மீறுவதால், பொதுமக்கள், பஸ் பயணிகள் தினமும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

                கடலூர் மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கு மேல் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  அரசு பஸ்கள் பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட நீண்ட தூரப் பகுதிகளுக்கு இயக்கப் படுகின்றன. மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பஸ்கள் மற்றும் புதுவை- கடலூர் இடையே இயக்கப்படுபவைகளில், தனியார் பஸ்கள்தான் அதிகம். இதனால் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்தில் பெரும்பாலான நேரங்களில் காணப்படுவது தனியார் பஸ்கள்தான். இந்த தனியார் பஸ்கள் திருப்பாப்புலியூர் பஸ்நிலையத்துக்குள் அவற்றுக்கான இடங்களில் முறையாக நிறுத்துவது இல்லை.

                   இதனால் எந்த ஊருக்குச் செல்லும் பஸ், எந்த இடத்தில் நிற்கிறது என்று கண்டுபிடிப்பதே பயணிகளுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. தனியார் பஸ்கள் ஒன்றுக்கொன்று, போட்டி போட்டுக் கொள்வதும், பஸ் புறப்படும் நேரங்கள் தொடர்பாக தினமும் மோதிக் கொள்வதும் பயணிகளை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. பயணிகள் பலர் இதனால் விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது. இதனால் திருப்பாப்புலியூர் பஸ் நிலையத்தில், பஸ்களை அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தவதற்காகவே, ஒலிபெருக்கி மூலம் ஒழுங்குப்படுத்தும் பணியை, 24 மணி நேரமும் போலீசார் மேற்கொள்ள நேர்ந்துள்ளது.

               பஸ் நிலையத்தில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் ஒழுங்கீனமாக செயல்படும் நிலை, பிற நகரங்களைவிட, கடலூரில் மிகவும் மோசம் என்று போலீசார்  தெரிவிக்கிறார்கள். டைமிங் பிரச்னைகளால் ஏற்பட்ட மோதல்களில் பஸ் ஊழியர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர். கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள், ரயில்வே மேம்பாலத்தின் சர்வீஸ் சாலைகள் வழியாக வெளியேறுகின்றன. இரு சாலைகளில் ஒன்று வெளியேறுவதற்கும் மற்றொன்று உள்ளே வருவதற்குமாக உள்ளது.

                    இதில்கூட தனியார் பஸ்கள் விதிகளைக் கடைபிடிப்பது இல்லை. ஒரு பஸ்ûஸ முந்திச் சென்று, கூடுதல் பயணிகளை ஏற்றி கலெக்ஷனை பார்க்க வேண்டும் என்ற வேகத்தில், போக்குவரத்து விதிகளை மீறி, இச்சாலைகளில் புகுந்து விடுகின்றன. இதனால் குறுகலான சர்வீஸ் சாலைகளில் எதிரும் புதிருமாக பஸ்கள் மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அங்கேயே இரு பஸ்களின் ஊழியர்களும் பஸ்களை விட்டு இறங்கி நின்று, சண்டை போட்டுக் கொள்ளும் நிலை பயணிகளை வெகுவாகப் பாதிக்கிறது. ஏதாவது ஒரு பஸ் பின்னோக்கி சென்றால்தான் பிரச்னை தீரும் என்ற நிலை, அன்றாட நிகழ்வாகி விட்டது. 

                தனியார் பஸ்களின் ஒழுங்கீனங்களை போலீசார்  கண்டு கொள்வதில்லை. மேலும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு இருக்கும், காற்று ஒலிப்பான்களால், எழுப்பப்படும் ஒலிகள் கர்ணகொடூரமாக, காதுகளை கிழிப்பதாக உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை, போக்குவரதத்து விழிப்புணர்வு வாரத்தின்போது மட்டும் சம்பிரதாயத்துக்காக, காற்று ஒலிப்பான்களை அகற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. காற்று ஒலிப்பான்கள் விதிகளின்படி நிரந்தரமாக அகற்றப்பட வேண்டும். அவற்றைப் பொருத்தும் பஸ்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கடலூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior