உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 09, 2010

அரசு தொழில் நுட்பத் தேர்வு நாளை முதல் துவங்குகிறது

கடலூர் :  

               அரசு தொழில் நுட்பத் தேர்வு நாளை 10ம் தேதி துவங்குகிறது. 

இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரின் செயலாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                   அரசு தொழில் நுட்பத் தேர்வுகளான விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் அச்சுக் கலைப்பிரிவு பாடங்களுக்கான தேர்வுகள் நாளை 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. அதில் விவசாய பிரிவு தேர்வு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த 5,401 பேருக்கு கடலூர் நகராட்சி பள்ளியில் நடக்கிறது.  அதேப் போன்று அச்சுக்கலை தேர்வு விருத்தாசலம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும், கைத்தறி நெசவு தேர்வு சேலம் மாவட்டம் வேம்படித்தலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. அச்சுக்கலை மற்றும் கைத்தறி நெசவுப் பிரிவு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) நாளை முதல் தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior