உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

சட்டமேலவை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணிக்கு கால அவகாசம் நீடிப்பு

கடலூர்

              தமிழக சட்டமேலவை தேர்தலுக்காக விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மத்தியம் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது.

                  வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 7-ந்தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்ப படிவங்கள் பெறுவதற்கான காலஅவகாசத்தை வருகிற 17-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது.

                      எனவே தமிழ்நாடு சட்டமேலவை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பட்டம் பெற்ற சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சுயஅத்தாட்சி செய்து கூடுதல் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளின் சான்றொப்பம் பெற்று தபால் மூலமாகவோ, நேரிலோ நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிகளிடம் வருகிற 17-ந்தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior