உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

கடலூரில் அரியவகை பட்டாம்பூச்சி

கடலூர்:

               கடலூரில் அரியவகை பட்டாம்பூச்சியை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர். விதவிதமான கலர்களில் பட்டாம் பூச்சி பறப்பதைக் கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.  

               ஆனால், வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், கலரும் வித்தியாசமாக இருந்தால் கேட்கவே வேண்டாம். கடலூர் சிப்காட் பகுதியில் நேற்று மாலை அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்த சிறுவர்கள், ஆவற்றை பிடித்து விளையாடினர். பிடிபட்ட பட்டாம்பூச்சி வழக்கத்திற்கு மாறாக 16 செ.மீ., அகலம் கொண்டதாகவும் இரண்டு அடுக்காக ஒன்றின் மேல் ஒன்றாக நான்கு இறக்கைகளுடன் பின்புறம் சிறிய அளவில் வால் போன்ற வடிவத்தில் காணப்பட்டது. 

              பட்டாம்பூச்சி என்றாலே கலர்புல்லாக இருக்கும். ஆனால், இந்த பட்டாம்பூச்சி சிப்காட் பகுதியில் கிடைத்ததாலோ என்னவோ வெளிறிய நிறத்தில் காணப்பட்டது. இந்த "மெகா' சைஸ் பட்டாம்பூச்சியை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior