உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 24, 2011

மாற்றுத் திறனாளிகளுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு

                தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணியிடங்களில் (குரூப்-4), மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான சிறப்புத் தேர்வு, வரும் ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இதற்கு, மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 

               அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 145, தட்டச்சர்கள் பணியிடங்கள் 106, சுருக்கெழுத்தர் பணியிடங்கள் 17 ஆகியவை நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கான சிறப்பு போட்டித் தேர்வு, ஆகஸ்ட் 7ம் தேதி 32 மையங்களில் நடக்கின்றன. எஸ்.எஸ்.எல்.சி., கல்வித் தகுதி கொண்ட மாற்றுத்திறனாளிகள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள், தபால் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மார்ச் 23ம் தேதி மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior