உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 24, 2011

சட்டசபை தேர்தல் தொடர்பான பயிற்சி: நாளை கடலூர் மாவட்ட கலெக்டர் கலந்துகொள்கிறார்

                 சட்டசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் பயிற்சி அளிக்க தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

       இந்த பயிற்சி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.

           பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், கோவை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) பயிற்சி அளிக்கப்படுகிறது. கடைசி நாளான சனிக்கிழமை நடத்தப்படும் பயிற்சியில் திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்துகொள்கிறார்கள்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior