உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 24, 2011

கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை கருத்தரங்கம்

கடலூர் : 

           கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் உளவியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. "தேசிய அளவில் மனித உரிமை நிகழ்வுகளும், சவால்களும்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரட்சகர் துவக்கி வைத்தார். 

            சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் சுதாகர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி பேராசிரியர் குமாரசாமி சிறப்புரையாற்றினார். கடலூர் பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் சேதுராமன் முதல் அமர்விற்கும், திருவண்ணாமலை அரசு கல்லூரி பேராசிரியர் தனிஸ்தாஸ் இரண்டாம் அமர்விற்கும் தலைமை வகித்தனர். நிறைவு விழாவிற்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் திருமுருகன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ராஜேந்திரன் பரிசு வழங்கிப் பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சின்னப்பன், அந்தோணிராஜ், ஜெயராஜ், ரூபி வயலட்ராணி, திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior