உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 28, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் சிற்றூர் சீரமைப்பு முகாம்

காட்டுமன்னார்கோவில் : 

            அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 300 பேர் பங்கேற்கும் 5 நாள் சிற்றூர் சீரமைப்பு முகாம் துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புல மாணவ, மாணவிகள் பங்கேற்கும் சிற்றூர் சீரமைப்பு முகாம் கடவாச்சேரி கிராமத்தில் துவங்கியது. 

                ஐந்து நாள் நடைபெறும் இம்முகாமில் 100 மாணவிகள் உட்பட 300 பேர் பங்கேற்கின்றனர். கடவாச்சேரியில் நடந்த துவக்க விழாவிற்கு என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். திட்ட அலுவலர் சுதாகர் வரவேற்றார். குமராட்சி சேர்மன் மாமல்லன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். வேளாண் புல முதல்வர் வசந்தகுமார் முகாமை துவக்கி வைத்தார். 

               துறைத் தலைவர்கள் குருதேவ், பிரகாஷ், சுந்தரவரதராஜன், தலைமை ஆசிரியர் மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடவாச்சேரி, நடுத்திட்டு, கூத்தன்கோவில், உசுப்பூர், சிவபுரி, திட்டு ஆகிய கிராமங்களில் மாணவ, மாணவிகள் தங்கி தூய்மைப் படுத்துதல், மரம் நடுதல், கல்வி பயிற்சி அளித்தல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior