உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

விருத்தாசலத்தில் 22 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் 5வது முறையாக களமிறங்குகிறது

விருத்தாசலம் : 

            விருத்தாசலம் தொகுதியில் 22 ஆண்டுகள் கழித்து தேர்தலை சந்திக்க காங். கட்சி களமிறங்கியுள்ளது. 

            தமிழகத்தில் இதுவரை நடந்த 13 சட்டமன்ற தேர்தல்களில் விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி நான்குமுறை வெற்றி பெற்றுள்ளது. 1962, 1967 தொடர்ந்து இரு தேர்தல்களில் பூவராகவனும், 1980, 1984ல் தொடர்ந்து இரு முறை தியாகராஜனும் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1989 முதல் 2006 வரை நடந்த நான்கு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி இங்கு போட்டியிடவில்லை. தொடர்ந்து 22 ஆண்டு இடைவெளிக்கு பின் இந்த தேர்தலில் காங்., போட்டியிட உள்ளது.

               இது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியை தந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேர்தலை சந்திப்பது தொகுதி மக்களிடம் புதிய கட்சி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் தொகுதியில் வலுவாக இருந்த காங்., கட்சி தற்போது சொற்ப ஓட்டு வங்கியையே வைத்துள்ளது. இதனால் தொகுதியில் மக்களிடம் பரிச்சயம் குறைந்துள்ளதாலும், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை நம்பியே எதிரணியை சந்திக்க வேண்டியிருப்பதாலும் காங்கிரசுக்கு இது சவாலான தேர்தலாகும். காங்கிரஸ் கட்சி விருத்தாசலம் தொகுதியில் மீண்டும் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று அரியனை ஏறி நீண்ட இடைவெளிக்கு முற்றுப் புள்ளி வைக்குமா என்பது வாக்காளர் கையில் தான் உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior