உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

கடலூரில் தையல் தொழிலாளி குடும்பத்துடன் உண்ணாவிரதம்






கடலூர் : 

                பிள்ளைக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி, தையல் தொழிலாளி குடும்பத்துடன் கடலூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டம், நெய்வேலி ஏழாவது வட்டத்தைச் சேர்ந்தவர் லெனின். தையல் தொழிலாளி. இவரது மனைவி ஜெயமணி. மகன்கள் தீ (14), இளந்தீ (12). நெய்வேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் தீக்கு, "கொட்டா' ஜாதிக்கான சான்றிதழ் கோரி கடந்த ஒன்றரை ஆண்டாக, கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிறார். 

             இருப்பினும் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, கடலூர் கலெக்டர் அலுவலகம் முன், லெனின், திடீரென தனது குடும்பத்தினருடன் நேற்று காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். போலீசார் அனுமதி மறுத்தும் லெனின் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து போலீசார், லெனினை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். இன்னும் ஒரு வாரத்தில் ஜாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என உறுதியளித்தைத் தொடர்ந்து உண்ணாவிரத்தை கைவிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior