உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 18, 2011

வங்கிப் பணிக்கு பொறியாளர்கள் தேவை அதிகரிப்பு


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரா
              
           வங்கித்துறை நவீனமாக்கப்பட்டு வருவதால்,வங்கிப் பணிக்குப் பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா தெரிவித்தார். 
 
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கைத் துவக்கி வைத்து மேலும் ந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா பேசியது:
 
              வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் சாதனை நிகழ்த்தி வரும் இந்தியாவின் விலைமதிப்பில்லா சொத்து, மாணவ சமுதாயமும், அவர்களை உருவாக்கும் கல்வி நிறுவனங்களும்தான்.  மாணவர்களின் மனிதவள ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,நடப்பு ஆண்டில் கல்விக்கடனாக ரூ.1,800 கோடி வழங்கி உள்ளது.  பணப் பரிமாற்றம் நடைபெறும் வங்கித் தொழிலில் தற்போது தகவல் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளின் தேவை அதிகரித்துள்ளது. 
 
             விரைவில் வளாக பணித் தேர்வு முறை மூலம் 525 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.  வங்கித் துறையில் ஏராளமான ஊழியர்கள் ஓய்வுபெறும் நிலையில்,தகவல்தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வகை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.  எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் பி.சத்யநாராயணன் பேசும் போது,மாணவர்கள் படிப்புடன் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 
 
              தற்போது பெங்களூரில் பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஆராய்ச்சி நிறுவனத்தை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில் ரூ50 கோடி செலவில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் அதிநவீன ஆராய்ச்சி மையத்தை இங்கு பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாமல், இதர மாணவர்களும் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார்.  பல்கலைக்கழக இயக்குநர் முத்தமிழ் செல்வன், துறைத்தலைவர் எஸ்.மலர்விழி, பேராசிரியர்கள் ஆர்.ரமேஷ்,ஜெ.மஞ்சுளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   .
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior